இந்தியாபயனுள்ள தகவல்மருத்துவம்

கோமியம் மருத்துவ பொருளாக அறிவிக்கபட இருப்பதாக மத்திய சுகாதர துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் செள பே அறிவிப்பு????

advertisement by google

கோமியம் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் மருத்துவ பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாகவும், யோகா, சித்தா, யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே தெரிவித்துள்ளார்.

advertisement by google

கோவை தனியார் மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய்க்கான சிகிச்சை கருவிகளை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் புற்று நோய்க்கு எதிரான போர் என்ற தலைப்பில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை இனை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சர்வதேச அளவிலான சிகிச்சைகள் இந்தியாவில் கிடைக்கின்றது எனவும் நோயாளிகளை தேடி சென்று மருத்துகள் சேவை அளிக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றார். மருத்துவ சேவையில் இந்தியா சிறப்பாக திகழ வேண்டும் என பிரதமர் விரும்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். வரும் 2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய சுகாதாரத்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு முழுவதும் புதியதாக 75 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட இருப்பதாகவும் இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்றார். தமிழகத்தில் மதுரையில் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமான பணிகள் நடை பெற்று வருகின்றது எனவும், இதே போல நாடு முழுவதும் பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், சேலம், மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.கோமியம் விரைவில் மருத்துவ பொருளாக அறிவிக்கப்படும் எனவும் அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், யோகா, சித்தாயுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்???????

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button