2009 ஆம் ஆண்டு ரோமில் போப்பாண்டவர் “கடவுளும் பிரபஞ்சமும்”என்ற தலைப்பில் கிறிஸ்துவ தலைமைச்சபையில் ஒரு மாநாட்டை கூட்டினார்.
அம்மாநாட்டுக்கு கடவுளை மறுக்கும் ஸ்டீவன் ஹாக்கிங்கை போப் அழைத்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கு சென்றார்.
உலகம் முழுதுமிருந்து வந்திருந்த விஞ்ஞானிகள் போப்பிடம் தலை தாழ்த்தி ஆசி பெற்றனர். ஆனால் அசைவற்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ந ஹாக்கிங் முன் வந்த போப் முழங்காலிட்டு தலைகுனிந்து தன்னை வாழ்த்தும்படி கேட்டார். வரலாற்றில் இதுவே முதல் முறை.அதுவும் கடவுளை மறுக்கும் ஒரு பகுத்தறிவாளர் முன்!
மாநாட்டில் ஹாக்கிங் தான் கண்டுபிடித்த கருவியின் வழியாக பேசினார்.பூமியையோ,நட்சத்திரத்தையோ,சூரியனையோ,நிலவையோ,உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.
நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய்.இது பொய் என்பதை விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என ஆணித்தரமாக எடுத்துவைத்தார்.இறுதியாக பேசிய போப் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை மறுத்து அவர்களை மதம் தண்டித்தது தவறு என்றும்,விஞ்ஞானத்துக்கு அப்பால் அதிசிய சக்தி இருக்கிறது என்று மதவாதிக்கே உரிய வலிமையற்ற வாதத்தை வைத்தார்.
ஹாக்கிங்கின் சில கூற்றுகள்.
1] கோளங்களில் இருண்ட குகைகள் இருக்கின்றன. அந்த இருட்டை விட விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளாமலும் ஏற்க மறுத்தும் அறியாமையில் உழலும் இருட்டுதான் ஆபத்தானது.
2] பல கோடிக்கணக்கான மக்கள் கடவுளை நம்புகிறார்கள் என்பதற்காக அந்த பொய்யை புத்தியுள்ள மனிதன் ஏற்க தேவையில்லை.
3] கடவுள் என்ற ஒருவர் இருந்தால் கூட அவர் இயற்பியல் விதிகளுக்கு கீழ்படியும் கடவுளாகத்தான் இருக்கமுடியும்.
4] நல்வாய்ப்பாக “பெருவெடிப்பு” பற்றிய என் உரையின் பொருள் பற்றி போப்பாண்டவருக்கு புரியவில்லை.இல்லையென்றால் எனக்கும் கலீலியோக்கு நேர்ந்த கதிதான்.
விஞ்ஞானத்தின் முன் மதம்தான் மண்டியிட வேண்டும்.விஞ்ஞானம் மண்டியிடக்கூடாது என்பதற்கான நினைவுட்டலே இப்பதிவு…