கிரைம்

100,200,50,20 ரூபாய் கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்கள் கைது, வேதாரண்யத்தில் பரபரப்பு✍️முழுவிவரம்?விண்மீன்நியூஸ்?

advertisement by google

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் 200, 100, 50, 20 ரூபாய் நோட்டுகளை கத்தரிப்புலத்தில் உள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் ஸ்கேன் செய்து, அதனை கணினி மூலம் பிரிண்ட் எடுத்து கள்ளநோட்டுக்களாக புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.இதையடுத்து கள்ளநோட்டுகள், கணினி, ஸ்கேன் எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.சிறுவர்கள் கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button