என் உயிர் தமிழினமே
23 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 1 ; கடவுள் வாழ்த்து ;
குறள் ; 6 ;
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்..
விளக்க உரை ;
ஐம்பொறிகளின் வழியாக
எழும் ஜந்துவகை ஆசைகளும்
இயல்பாகவே இல்லாது
அடங்கப்பெற்ற கடவுளை
யடைவதற்குரிய
நிலைபெற்ற நல்லொழுக்க
முறையைப் பற்றியவர்கள் ,
எக்காலத்தும் செவ்விதின்
வாழ்வார்கள் ,
அதாவது ஒருவர் தன்
வாழ்வில் ஐம்புல
ஆசைகளையும் ஒழித்து
கடவுளின் ஒழுக்க
நெறியில் நிற்பவர்
நீண்டகாலம் நலமுடன்
வாழ்வார்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்