கிரைம்

சென்னை அண்ணா சாலையில் பான்மசாலா கடையில் கஞ்சா சாக்லெட்கள் விற்ற வடமாநில வாலிபர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

சென்னை: சென்னை அண்ணா சாலை, வெங்கடேசன் 2வது தெருவில் உள்ள பான் மசாலா கடையில், வாடிக்கையாளர்களுக்கு ரகசியமாக கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பான் மசாலா என்ற பெயரில் கஞ்சா சாக்லெட்கள் மற்றும் பான் கஞ்சா உருண்டைகள் ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

advertisement by google

இதையடுத்து கடை ஊழியர் பீகார் மாநிலம் கட்டோரியா பகுதியை சேர்ந்த கஸ்ரத்தூரி (28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 38.6 கிலோ கஞ்சா சாக்லெட், 25 கிலோ ஹான்ஸ், கூலிப், ஸவாகத், விமல், பாபா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பான் மசாலா கடையின் உரிமையாளர் சிக்கந்தரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button