தமிழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒட்டகம் ஊத்துக்கோட்டை முகாமில் பராமரிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஜாகிர்ஷா என்பவர் ஒட்டகத்தை பரிசாக அளித்தார்.2 வயது நிரம்பிய அந்த ஒட்டகத்துக்கு கருப்பு சிவப்பு நிற சால்வை போர்த்தப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிசாக அளிக்கப்பட்டது.அந்த ஒட்டகத்தை பராமரிப்பதற்காக உடனடியாக சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் உயிரியல் பூங்கா அதிகாரிகளால் அந்த ஒட்டகத்தை அங்கு வைத்திருக்க முடியவில்லை. ஏனென்றால் ஒட்டகத்தை தனியாக அடைத்து வைத்திருப்பதற்கான வசதி மற்றும் அதை பராமரிக்கும் வசதி அங்கு இல்லை.மேலும் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக் கழகமும் போதிய வசதிகள் இல்லாததால் அதை அழைத்து செல்ல மறுத்து விட்டது.இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒட்டகம் ஊத்துக்கோட்டையில் உள்ள முகாமில் பராமரிக்கப்படுகிறது. பீப்புள் பவர் அனிமல்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் காப்பகத்தில் ஒட்டகம் பராமரிக்கப்படுகிறது.அந்த ஒட்டகம் நன்றாக சாப்பிட்டு விட்டு ஆரோக்கியமாக இருப்பதாக காப்பகத்தை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button