முதல்வர் ஸ்டாலினின் மனைவியான துர்காஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்று, ஒருநொடியில் சுற்றியுள்ளோரை,ஆச்சர்யத்தை ஏற்படுத்திய அமைச்சர் சேகர்பாபு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
சென்னை: அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலினின் மனைவியான துர்காவின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஸ்டாலினின் மனைவி துர்கா பங்கேற்று நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். 70 ஜோடிகளுக்கும் ரூ.1 லட்சம் மதிப்பில் தலா 4 கிராம் தங்கத் தாலி, கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி, கிரைண்டர் உட்பட 36 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின்போது, துர்காவிற்கு நினைவு பரிசாக பெரிய கடிகாரத்தை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு, தொடர்ந்து பட்டுச்சேலையும் பரிசளித்ததாக தெரிகிறது. அப்போது திடீரென துர்காவின் காலில் விழுந்து ஆசிப்பெற்ற சேகர்பாபுவின் செயலால் அங்கிருந்தவர்கள் சில நொடிகள் ஆச்சர்யம் அடைந்தனர்