என் உயிர் தமிழினமே
5 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 61 ; மடி இன்மை ;
குறள் ; 602 ;
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
விளக்க உரை ;
தாம் பிறந்த குடியை
மேன்மேல் உயரும்
நற்குடியாக வேண்டுவார்
சோம்பலை இடையூறாகக்
கடிந்து முயற்சி செய்ய
வேண்டும் ,
அதாவது ஒருவன் தனது
குடும்பம் மேன்மேலும்
உயர்ந்து நல்ல நிலைக்கு
வரவேண்டும் என்று
விரும்பினால் ,
முதலில் அவன்
சோம்பேறியாக இருக்க
கூடாது ,
தீவிர முயற்சியுடன்
கடுமையாக உழைக்க
வேண்டும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

