விவசாயம்

விவசாய டிராக்டர்களை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் போலீசார் வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

சென்னை:விவசாய டிராக்டர்களை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் போலீசார் வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக கிராமப் புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்களை வாகன தணிக்கையின் போது போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடுவதாகவும் அதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு விவசாய அமைப்புகளால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.வாகன தணிக்கையின் போது டிராக்டர்களில் விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாய தொழிலாளர்களை காத்திருக்க வைக்கப்படுவதாகவும், இதனால் நாற்று நடுதல், அறுவடை போன்ற முக்கிய விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலாமல் போவதோடு, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே மாநகர போலீஸ் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அலுவலர்களுக்கு இது தொடர்பாக தேவையான அறிவுரைகளை வழங்கி, விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button