தாமரை மலர் எண்ணெயின் மருத்துவ பலன்கள்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
தாமரை மலரில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவப் பலன் மிக்கது என்று கூறப்படுகிறது.
இந்த எண்ணெய்யை முகம், கை, கால்களில் பூசினால், தோலின் மேல் படியும் இறந்த உயிரணுக்களை (செல்) அகற்றும்.
வறட்சியில் இருந்து பாதுகாத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தரும்.
தாமரை எண்ணெய்யை நகங்களின்மீது தடவி வந்தால் அவை உறுதியாகும்.
இந்த எண்ணெய் தாமரை மலரின் இதழ்கள் மட்டுமன்றி விதைகளையும் பயன்படுத்தித் தயாரிக்கப் படுகிறது. சருமப் பராமரிப்புக்குத் தேவையான சத்துகள் இதில் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் குறைந்து முகம் பொலிவுபெறும்.
தாமரை எண்ணெய்யில் உள்ள மூலக்கூறுகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதனால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை குறையும் எனப்படுகிறது.
தொடர்ந்து இதைத் தடவினால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும், தூக்கமின்மைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.