கோவில்பட்டி, அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவானஐப்பசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்✍️ சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கொடிமரத்துடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்✍️பெருந்திரளான மக்கள் பங்கேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கோவில்பட்டி, அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஐப்பசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரையில் மீனாட்சி அம்பாள் கோவிலைப் போல வ கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலிலும் மிகவும் பிரசத்திபெற்றது. இந்தக் கோவில் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துக்குப் பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கே.பி.ராஜகோபால், ஆழ்வார்சாமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை என சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ஆம் நாளான இம்மாதம் 19ஆம் தேதி திருத் தேரோட்டம், 21ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அம்பாள் தவசு மண்டபத்தில் எழுந்தருளல், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது..