புதுமை நகர் பரலோக அன்னையே… உம் புகழ் கொண்ட கவி எழுத ஆசிக்கு கோடான நன்றிகள்… ?கவிதை தமிழன் , காமநாயக்கன்பட்டி?cell:7401319412?நான் பார்த்த முதல் முகம் நீ… கண்ணை மூடினால் கரு விழியில் நீ… கால் தடிக்கினாலும் உன் பெயரே… எழுந்தாலும் உன் பெயரே… தனிமையிலும் உன் பெயரே… இந்த மண்ணில் பிறக்க கடந்த சென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ… உம் தேரின் அச்சாணியாக இருந்திருப்பேனோ… தேரில் மிதி படும் சிறு கல்லாக இருந்திருப்பேனோ… அல்லது உமது காலடியில் உருகிய மெழுகாக இருந்திருப்பேனோ… உம் புகழை உலகறிய அருளானந்தரும் வீரமாமுனியும் செய்த முயற்சிகள் வெற்றியே தந்தன… கிணற்றில் விழுந்து உயிர் பெற்ற சிறுமி ஆகட்டும், உம் சுரூபம் திருடி பார்வை இழந்த திருடனாக ஆகட்டும், இவை கண்களுக்கு புலபட்ட புதுமைகளே… கண்ணிற்கு புலப்படாமல் நடக்கும் புதுமைகள் ஏராளம்… மூன்று முறை ஆலயத்தை சுற்றி கும்பிடு சேவை செய்யும் குழந்தையும் சரி, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கும் வயதான மூதாட்டியும் புதுமையே… உம் பாதம் தொட்ட எலுமிச்சை நீர் எங்களுக்கு தீர்த்தமாக ஆவது சிலிர்க்க செய்கிறது… அரியணையில் இருந்து ஆட்சி புரிந்தாலும் உம் பிள்ளைகளின் இல்லத்திற்கு நீர் வருகை புரிவது மாபெரும் புதுமையே… இனி வரும் காலங்களில் தேர் வரும் பாதையை எங்கள் கண் இமைகள் கொண்டே பெருக்கி விட எங்களுக்கு ஆசி புரியும்… நன்றிக்கடனாக என்ன செய்வதென்று தெரியவில்லை இந்த புண்ணிய பூமியில் பிறந்ததற்கு… நீர் பிறந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமை இது… உம் முகம் கண்டு இந்நாள் செழிப்புர உம் வழியாக இறை மகன் இயேசு கிறிஸ்துவை மன்றாடுகின்றோம்…??? புதுமை நகர் பரலோக அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்… ~~கவிதை தமிழன்~~
புதுமை நகர் பரலோக அன்னையே…
உம் புகழ் கொண்ட கவி எழுத ஆசிக்கு கோடான நன்றிகள்…
நான் பார்த்த முதல் முகம் நீ… கண்ணை மூடினால் கரு விழியில் நீ… கால் தடிக்கினாலும் உன் பெயரே… எழுந்தாலும் உன் பெயரே… தனிமையிலும் உன் பெயரே… இந்த மண்ணில் பிறக்க கடந்த சென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ… உம் தேரின் அச்சாணியாக இருந்திருப்பேனோ… தேரில் மிதி படும் சிறு கல்லாக இருந்திருப்பேனோ… அல்லது உமது காலடியில் உருகிய மெழுகாக இருந்திருப்பேனோ… உம் புகழை உலகறிய அருளானந்தரும் வீரமாமுனியும் செய்த முயற்சிகள் வெற்றியே தந்தன… கிணற்றில் விழுந்து உயிர் பெற்ற சிறுமி ஆகட்டும், உம் சுரூபம் திருடி பார்வை இழந்த திருடனாக ஆகட்டும், இவை கண்களுக்கு புலபட்ட புதுமைகளே… கண்ணிற்கு புலப்படாமல் நடக்கும் புதுமைகள் ஏராளம்… மூன்று முறை ஆலயத்தை சுற்றி கும்பிடு சேவை செய்யும் குழந்தையும் சரி, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கும் வயதான மூதாட்டியும் புதுமையே… உம் பாதம் தொட்ட எலுமிச்சை நீர் எங்களுக்கு தீர்த்தமாக ஆவது சிலிர்க்க செய்கிறது… அரியணையில் இருந்து ஆட்சி புரிந்தாலும் உம் பிள்ளைகளின் இல்லத்திற்கு நீர் வருகை புரிவது மாபெரும் புதுமையே… இனி வரும் காலங்களில் தேர் வரும் பாதையை எங்கள் கண் இமைகள் கொண்டே பெருக்கி விட எங்களுக்கு ஆசி புரியும்… நன்றிக்கடனாக என்ன செய்வதென்று தெரியவில்லை இந்த புண்ணிய பூமியில் பிறந்ததற்கு… நீர் பிறந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமை இது… உம் முகம் கண்டு இந்நாள் செழிப்புர உம் வழியாக இறை மகன் இயேசு கிறிஸ்துவை மன்றாடுகின்றோம்…???
புதுமை நகர் பரலோக அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்…
கவிதை தமிழன்