கோவில்பட்டியில் பேருந்து நிலைய அனுமதி இல்லாமல் பேருந்து நிலையத்திற்குள் இடையூறு செய்யும் சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்பேரரசு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச்செயலாளர் மா.வேல்முருகன் தலைமையில் கோரிக்கை மனு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தூத்துக்குடி
பொருள்
பேருந்து நிலைய அனுமதி இல்லாமல் பேருந்து நிலையத்திற்குள் இடையூறு செய்யும் சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு
ஐயா வணக்கம்
கோவில்பட்டியில் அதிகளவு சிற்றுந்துகள் பயன்பாட்டில் உள்ளது எந்த சிற்றுந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்வதில்லை மாற்றாக சட்டவிரோதமாக மாற்று வழித்தடங்களில் சென்று வருகின்றனர் இதனால் பொது மக்களுக்கு பயன்படாத வண்ணம் உள்ளது இதுபோல் பெரிய பேருந்துகளுக்கும் இடையே சண்டை மோதல்கள் ஏற்பட்டு சட்டம் ஓழுங்கு பாதிக்கப்படும் நிலை உள்ளது ஆகவே சிற்றுந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க அறிவுறுத்துமாறு தவறும் பட்சத்தில் அந்தப் பேருந்துகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்குள் பர்மிட் இல்லாமல் சிற்றுந்துகள் பேருந்து நிலையம் வருவதால் போக்குவரத்து நெரிசலும் பொதுமக்களுக்கு மிகுந்த மன உளைச்சலும் ஏற்படுத்தி வருகிறார் ஆகவே பேருந்து நிலையம் பர்மிட் இல்லாத சிற்றுந்துகள் பேருந்து நிலையம் வரக்கூடாது என்ற அறிவுறுத்துமாறு அதற்கு அதற்கு மேல் விதியை மீறும் பேருந்துகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்