இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பியோட்டம்*
advertisement by google
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
advertisement by google
இலங்கை அதிபர்கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
advertisement by google
இந்நிலையில், இன்று கோத்தபய ராஜபட்ச மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்ற நிலையில், பலர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
advertisement by google
இதனிடையே போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
advertisement by google
இதையடுத்து போராட்டக்காரர்களின் முற்றுகை காரணமாக அதிபர் கோத்தப ராஜபட்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
advertisement by google
advertisement by google