அதிமுக கட்சியினரிடையே இ.பி.எஸ்.,சா? ஓ.பி.எஸ்.,சா? அனைத்து சமூக வலைதளங்களிலும் மற்றும் பேஸ்புக் ,வாட்சாப் குழுக்களில் அ.தி.மு.க.,வினர் மீம்ஸ் போர்✍️முழுவிவரம்✍️ விண்மீன்நியூஸ்
அதிமுக கட்சியினரிடையே இ.பி.எஸ்.,சா? ஓ.பி.எஸ்.,சா? அனைத்து சமூக வலைதளங்களிலும் மற்றும் பேஸ்புக் ,வாட்சாப் குழுக்களில் அ.தி.மு.க.,வினர் மீம்ஸ் போர்*
திருப்பூர் :அ.தி.மு.க., எதிர்காலத்துக்கு, ஒற்றை தலைமையே வேண்டுமென்ற விவாதம் வலுத்துள்ளது. கடந்த சில நாட்களாக, இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் இடையே கடும் போட்டியும், மோதல் போக்கும் நீடிக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் அடங்கிய, ‘வாட்ஸ் ஆப்’ குழுக்களில், இதுதொடர்பான காரசாரமான விவாதம் சென்று கொண்டிருக்கிறது. இருவேறு ஆதரவாளர்களும், தங்கள் தலைவரே பொது செயலாளராக வர வேண்டுமென, பகிரங்கமாக குரல் கொடுக்க துவங்கிவிட்டனர்.பரஸ்பரம் இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., மீது ‘மீம்ஸ்’ போர் தொடுத்து வருகின்றனர்.
அதே குழுக்களில் உள்ள நடுநிலையாளர்கள், நமக்கு கட்சி முக்கியம்; எனவே கட்சியில் கலந்துபேசி சுமூகமாக முடிவு எடுக்க வேண்டும். எப்போதும், கட்சிக்கு பாதிப்பு வராதபடி நடந்துகொள்ள வேண்டும் என, அதே குழுக்களில் சமரசம் செய்து கொண்டே இருக்கின்றனர். எப்படியிருந்தாலும், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக, பெரும்பாலானோர் ஒப்புக்கொண்டு, காத்திருக்கின்றனர்.