கோவில்பட்டியில் திமுக நகர கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மோர் பந்தலை திமுக நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கா.கருணாநிதி திறந்து வைத்து ,மோர் வழங்கி சிறப்பிப்பு?முழுவிவரம்?
கோவில்பட்டியில் திமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு
கோவில்பட்டியில் திமுக நகர கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மோர் பந்தலை திமுக நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கா.கருணாநிதி திறந்து வைத்தார்.
தமிழகத்தில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தமிழக முதல்வர் நீர்,மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டுமென திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதின் பேரில் கோவில்பட்டி திமுக நகர கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு 17 வது வார்டு செயலாளர் பாஸ்கரன், ஏற்பாட்டின் பேரிலும் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், மற்றும் நகர சிறுபான்மையினர் அமைப்பாளர் திலக் பாபு, ஆகியோர் ஏற்பாட்டின் பேரிலும் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மோர், இளநீர், தர்பூசணி, உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினர் மோர் பந்தலை கோவில்பட்டி நகர்மன்றத் தலைவரும் நகரச் செயலாளருமான கா.கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தலைமை ஏற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மற்றும் மாரிச்சாமி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜகுரு, கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் ஜாஸ்மின் லூர்துமேரி,கருப்பசாமி, கனகராஜ், சண்முகராஜ், சண்முகவேல், உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.