கோவில்பட்டியில் பிரஷ்தி பெற்ற செண்பகவல்லியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா ,திரளான பக்தர்கள் பங்கேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், கோவில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து சென்று கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமசந்திரன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், கோவில் அலுவலர் நாகராஜன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, கோவில்பட்டி நகராட்சி 20வது வார்டில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா வேட்பாளர் விக்னேஷ்ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் போடூசாமி, செல்வக்குமார், பழனிக்குமார், கட்டளைதாரர் கு.வேலாயுதம் செட்டியார் குடும்பத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.