🌺🌺🌺அதிகமான சிந்தனை துளிகள்🌺🌺🌺: பிச்சை கொடுப்பதிலும் இவனுங்களுக்கு
சுயநலமே
தனக்குப் புண்ணியம் கிடைக்கும் என்னும்
சில்லறை புத்தி
இப்படி பண்ணுனா கண்டிப்பா
நாசமாத் தான் போவோம்…
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: எத்தனை வயதானாலும் சரி
சில நினைவுகளுக்கு மட்டும்
வயதாகுவதில்லை…
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: ஆசைப்பட்ட எல்லாம்
கற்பனையோடு மட்டுமே முடிந்து விடுகிறது
பலரது வாழ்வில்…
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: போலியான வண்ணங்களுக்கு
கருமையே சிறப்பு….
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: பக்கத்துத் தட்டில்
விழுந்த காசு சத்தத்தில்
தன் தட்டைத் தடவிப் பார்க்கும் குருட்டுப் பிச்சைக்காரனைப் போல் எங்கேயோ பார்த்து நீ சிரிக்க
என்னைத் தான் என
நான் புல்லரித்துப் போகிறேன்
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: ஒவ்வொரு பெண்ணின்
வெற்றிக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் ஆண் இருக்கிறான்…
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: விழித்திரையினும்
மெல்லியது என் இதயம்
உன் வார்த்தை நகங்களால்
காயப்படுத்தி விடாதே
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: இனி
இழப்பதற்க்கு
ஏதுமில்லை
என்ற முடிவிற்க்கு
நான் வந்த பின்
அறிமுகமானவள் நீ
எனக்கு.
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: எண்ணமெல்லாம்
அவள்
எனை
எண்ணுவாளோ
அவள்.
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: உன் வீட்டுக் கண்ணாடியில்
கவிதை எழுதி வைத்து விட்டு வந்திருக்கிறேன்
நீ போய் நின்றுபார்
என் கவிதை தெரியும் உனக்கு.
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: என்னைக்
கொல்வதற்க்காகவே
பிறந்தவள் நீ
பக்கத்திலிருக்கும் போது பார்வைகளால்
தூரத்திலிருக்கும் போது
நினைவுகளாய்.
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: காதலிக்காமே
சாகக்கூடாது
ஆனா
காதலுக்காக
சாகக்கூடாது.
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: சிந்தனைத் துளிகள்…
] பிறரைச் சீர்திருத்தும் பணியை விட,தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.
2] பகைவனின் புன்சிரிப்பை விட, நண்பனின் கோபம் நல்லது.
3] கடமையைச் செய்ய முயலுங்கள், அப்போது தான் உங்களின் தகுதியை அறிந்து கொள்ள முடியும்.
4] விவேகம் உள்ளவனுக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை.
5] தொடர்ந்து ஆர்வம் கொண்டிரு கண்டிப்பாக முன்னேற்றம் வந்தே தீரும்.
6] தண்ணீர் வெந்நீரானாலும், நெருப்பை அணைக்கும்.
7] சொர்க்கமும்,நரகமும் உன் உள்ளத்தில் இருக்கிறது.
8] சேற்றில் விழுவது ஒன்றும் இழிவில்லை. அங்கேயே கிடப்பது தான் இழிவு.
9] இளமை புண்ணியமும் இல்லை, முதுமை பாவமும் இல்லை.
10] நாற்பது என்பது இளமையில் முதுமை, ஜம்பது என்பது முதுமையில் இளமை.
11] உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால், ஜெயிக்கிறது.
12] உண்மையைத் தவிர,வேறெதுவுமே அழகில்லை.
13] நேரம் விலை உயர்ந்தது,ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: செருப்புகள் பேசினால்…
செருப்புகள் பேசினால் இப்படித் தான் பேசுமோ?
செருப்புகள் நாங்கள்… இணைந்த ஜோடி.
எப்போதும் இணை பிரியாத ஜோடி!
ஒரு தர ஜோடி என்றால் உலகிலேயே….
நூற்றுக்கு நூறு சதம் அது நாங்கள் தான்.
எங்களுக்கு மிஞ்சிய ஜோடி இல்லவேயில்லை !
செருப்பு ஜோடி தான் சிறந்த ஜோடி என்று ஜெகமே கூறும்.
ஒரே நிறம்….
ஒரே அளவு…
ஒரே கனம்…
ஒரே எடை…
ஒரே மாதிரி என்றால்…
அது நாங்களே நாங்கள் தான் !
நாங்களும் நாய்களைப் போலவே விசுவாசமானவர்கள் !
காலடியிலேயே காத்துக் கிடப்போம் !
சமயங்களில் எங்கள் எஜமான்கள் தான்…
எங்களை மறந்து விட்டு விடுவார்கள்.
கல்லிலும் -முள்ளிலும் காலடியில் கிடந்து…
மனிதர்களைக் காவல் காக்கும் நாங்கள்…
பாதுகாவலர்கள் போன்ற பாதக் காவலர்கள்!
காடு மேடுகளிலும் வீதி வெளிகளிலும்….
மனிதர்களைத் தூக்குத் தூக்கென்று தூக்கித் திரியும்…
தூக்குத் தூக்கிகள் நாங்கள்!
எங்களை வாங்கிய எஜமான்களுக்கு…
வஞ்சகமில்லாமல் தேய்ந்து…..
மெலிந்து அறுபடும் வரையிலும்….
ஆகாத வரையிலும் அயராதுழைப்போம் !
மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்….
எங்களை சமயங்களில் கழட்டி விட்டு விடுகிறார்கள்!
வாசல் வரை தான் எங்கள் சேவை மனிதருக்குத் தேவை…
அதற்கு மேல் நாங்கள் அனுமதிக்கப் படுவதில்லை.
அது தான் பெருத்த அவமானம்!
அதனால் தான் நாங்களும் சமயங்களில் வார் அறுந்து…
பதிலுக்குப் பதில் பழி வாங்கி விடுகிறோம் .
வைபவங்கள்….
கோவில்கள்….
என்று மக்கள் கூடுகின்ற கூட்டங்களில் எல்லாம்….
எங்களைக் கொள்ளை அடிப்பதற்கென்றே….
ஒரு கூட்டம் இருக்கிறது .. அது தான் வெட்கம் !
எங்களுக்கு ஒரு வருத்தம்…
மனிதர்கள் ஒருவரை ஒருவர் அவமானப்படுத்த
எங்கள் பெயரையும் எங்களையும் பிரயோகிப்பது மிக மிகத் தப்பு!
எங்களுக்கு செருப்பு -மிதியடி பாதக்குறடு -எனப் பெயர்கள் பல உண்டு !
அவையெல்லாம் பொருந்தாப் பெயர்கள்.
எங்களுக்கு ‘பாதப் பல்லக்கு ‘என்னும் பெயரே அருமையான பொருத்தம்.
அப்படியே அழையுங்கள் !
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: சிந்தனைத் துளிகள்…
] பிறரைச் சீர்திருத்தும் பணியை விட,தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.
2] பகைவனின் புன்சிரிப்பை விட, நண்பனின் கோபம் நல்லது.
3] கடமையைச் செய்ய முயலுங்கள், அப்போது தான் உங்களின் தகுதியை அறிந்து கொள்ள முடியும்.
4] விவேகம் உள்ளவனுக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை.
5] தொடர்ந்து ஆர்வம் கொண்டிரு கண்டிப்பாக முன்னேற்றம் வந்தே தீரும்.
6] தண்ணீர் வெந்நீரானாலும், நெருப்பை அணைக்கும்.
7] சொர்க்கமும்,நரகமும் உன் உள்ளத்தில் இருக்கிறது.
8] சேற்றில் விழுவது ஒன்றும் இழிவில்லை. அங்கேயே கிடப்பது தான் இழிவு.
9] இளமை புண்ணியமும் இல்லை, முதுமை பாவமும் இல்லை.
10] நாற்பது என்பது இளமையில் முதுமை, ஜம்பது என்பது முதுமையில் இளமை.
11] உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால், ஜெயிக்கிறது.
12] உண்மையைத் தவிர,வேறெதுவுமே அழகில்லை.
13] நேரம் விலை உயர்ந்தது,ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: எங்க வீட்டு பிள்ளை
படம் வந்த பிறகு
அந்த நடிகையை
கைல வெச்சி தாங்குவானுங்க பாருங்களேன்
இந்த இணைய போராளிஸ்…❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: இந்த கண்ணாடி போட்டவங்க
ஆங்கில வேர்ட்ஸ் அதிகமா
பேசுறாங்க
உத்து உத்து பாத்து இங்கிலீஷ் படிச்சி தான் கண்ணு போங்கு ஆச்சின்னு நினைக்கிறேன்
😊😊😊😊😊😊😊😊
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: முன்னேறி செல்லும் போது காதுகளை மூடிக்கொள்.
இல்லைனா விழும் வார்த்தைகளினால்
விழுந்து விடுவாய்.
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: மௌனமாகவே கடந்து செல்லுங்கள்.
கல்லாகக் கிடக்கட்டும் எதிரிகளின் எதிர்ப்புகள்
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: ஈர்க்கும் பொருளை
வெறுக்கத் தெரிந்தால்
அவன் ஞானி…
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: வயசாகுதுனு வருத்தப்படுறதா இல்ல சாவ நெருங்கிட்ருக்கோம்னு சந்தோசபடுறதானே தெரியல..
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: தனிமையைத் தேடும் போது முன் கூட்டியே
இடம் பிடித்துக் கொள்கிறது
அவள் நினைவுகள்..
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: அட்வைஸ் என்பது ஆண்களின் தொப்பை போல எவனும் ரசிக்க மாட்டான்…
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: நம் பலம் மட்டும் பலம் இல்லை
எதிரியின் பலவீனமும் நமக்குப் பலம் தான்.
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: வாய்ப்புகள் இல்லாத போது, திறமையால் ஒன்றும் பயனில்லை.
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: ஒருவரின் வார்த்தை
நம் வாழ்க்கையை அழகாய் நகர்த்தும்.
இன்னொருவரின் வார்த்தை நம் வாழ்க்கையை வெறுக்கச் செய்யும்.
நாவடக்கம்
கற்பிற்கும் மேல்…
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: ஆண்கள் செய்யும் தவற்றிற்கு
அறிவுரைகளை பெண்களுக்குத் தண்டனையாக வழங்கப்படுகிறது…
பெண்கள் செய்யும் தவறுக்கு கோபம்
ஆண்களுக்கு உசுப்பேத்தலாய் வழங்கப்படுகிறது…
அதனால் தான் ஆண்கள் சில்லறைகள்.
[9/30, 9:23 PM] விண்மீன்நியூஸ்: காத்திருப்பும் கனவுகளும்….
காதலின் காத்திருப்பு
கல்யாணம் ஆகும் வரை..
கல்யாணத்தின் காத்திருப்பு
குழந்தைகள் பிறக்கும் வரை..
குழந்தைகளின் காத்திருப்பு
பொம்மைகள் கிடைக்கும் வரை..
பெற்றோர்களின் காத்திருப்பு
குழந்தைகள் வளரும் வரை..
மாணவனின் காத்திருப்பு
மதிப்பெண்கள் பெரும் வரை..
இளைஞனின் காத்திருப்பு
வேலை கிடைக்கும் வரை..
ஆசிரியரின் காத்திருப்பு
அறிவுரை கூறும் வரை..
நோயாளியின் காத்திருப்பு
மருந்து கிடைக்கும் வரை..
பள்ளியின் காத்திருப்பு
பரீட்சை முடியும் வரை..
விடுமுறையின் காத்திருப்பு
பள்ளித் திறக்கும் வரை..
மெட்டுக்களின் காத்திருப்பு
இசையாகும் வரை..
மொட்டுக்களின் காத்திருப்பு
பூவாகும் வரை..
பூவின் காத்திருப்பு
கனியாகும் வரை..
கனிகளின் காத்திருப்பு
விதையாகும் வரை..
விதையின் காத்திருப்பு
மரமாகும் வரை..
மரத்தின் காத்திருப்பு
நிழல் தரும் வரை..
நிழலின் காத்திருப்பு
வெளிச்சம் உள்ள வரை..
வெளிச்சத்தின் காத்திருப்பு
இருளாகும் வரை..
இருளின் காத்திருப்பு
விடியலின் வரை..
விடியலின் காத்திருப்பு
வாழ்க்கையின் எல்லை வரை..
வாழ்க்கையின் காத்திருப்பு
எதுவரையோ..?
வினாவின் காத்திருப்பு
விடைக் கிடைக்கும் வரை..
வாழ்வோம்
காத்திருந்து காத்திருந்து
வயதாகும் வரை…
ஆசையின் காத்திருப்பு
விருப்பத்தை அடக்கும் வரை..
விருப்பத்தைக்
குறைத்துக் கொண்டு
வாழ்வோம்
மேன்மையாக…!!!