பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல்! ரேஷன் கடையில் கருப்பட்டி வழங்க அறிவிக்கப்பட்டவை சாத்தியமா? சரியானதா? தமிழக அரசின் தொடரும் பாரபட்சம்?✍️பனை இளவரசி கவிதா காந்தி வழக்கறிஞர்/சமூக செயற்பாட்டாளரின் செய்தி மற்றும் கானொளி வீடியோ காட்சி✍️
12.1.2022
பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல்!
ரேஷன் கடையில் கருப்பட்டி வழங்க அறிவிக்கப்பட்டவை சாத்தியமா?
சரியானதா?
தமிழக அரசின்
தொடரும்
பாரபட்சம்?
20 லட்சம்
பனைத் தொழிலாளர்கள்
பதநீர் இறக்க மரமேற வேலைக்கு சென்றால் அவர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏதேனும் விபத்து ஏற்படின் அவர்களுக்கான காப்பீட்டுத்தொகை ,இழப்பீட்டுத் தொகை, மானியம் மற்றும் (முன்னாள் முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் வழங்கப்பட்டதை போல்)
உபகரணங்கள் , உதவித்தொகை போன்றவை முறையாக அரசு இதுவரையில் அறிவிக்காதது ஏன்?
எனவே இக்கால சூழலுக்கு ஏற்ப உயர்த்தப்பட்ட உரிய இழப்பீட்டுத் தொகை ,காப்பீட்டுத் தொகையை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் இதற்கான கோரிக்கைகளை பலமுறை தமிழக அரசுக்கு முன் வைத்துள்ளேன் இரண்டு மாநாடுகள் வாயிலாகவும் செய்தித்தாள்கள் வாயிலாகவும் , தொலைக்காட்சி செய்திகளின் வாயிலாகவும் ,பனை தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான 22 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 19 .12. 2021 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மூலமாகவும் அரசுக்கு முன்னெடுத்துச் சென்று உள்ளேன்.
இது பனை தொழிலாளர்களை நம்பி இருக்கும் (குடும்ப உறவுகள் )குடும்பத்தை காக்க ஏதுவாகும் .
பல குடும்பங்கள் நிர்கதியாய் நிறுத்தப்படும் சூழல் இதனால் தவிர்க்கப் படலாம்
இதற்கான முறையான தொகையை பனை தொழிலாளர்களிடம் இருந்து அரசு வசூலிக்கலாம்.
பனை இளவரசி கவிதா காந்தி வழக்கறிஞர்/சமூக செயற்பாட்டாளர்
பனையெனும் கற்பகத்தரு அறக்கட்டளை &
KAVITHA AIDED COUNSELING TRUST
9080428205
M. K. Stalin DMK – Dravida Munnetra Kazhagam Chief Minister of T12.1.2022amil NaduUdhayanidhi Stalin DMK