சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது; 10 பைக்குகள், சேவல்கள் பறிமுதல்✍️உயிரிழந்த, உயிருள்ள சேவல்களை போலீஸார் கரூரில் பறிமுதல்✍️முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
கரூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது; 10 பைக்குகள், சேவல்கள் பறிமுதல்
கரூர்: கரூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 10 இரு சக்கர வாகனங்கள், உயிரிழந்த, உயிருள்ள சேவல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கரூர் திருமாநிலையூரில் தனியாருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. அங்குள்ள காலியிடத்தில் சிலர் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு இன்று (ஜன. 15ம் தேதி) தகவல் வந்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றதை அடுத்து அங்கிருந்து 10-க்கும் மேற்பட்டோர் தங்கள் 2 சக்கர வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினர். இதில் சிக்கிய பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, அங்கிருந்த 10 இரு சக்கர வாகனங்கள், 1 உயிரிழந்த சேவல் உள்ளிட்ட 3 சேவல்களை கைப்பற்றினர்.
சம்பவ இடம் முழுக்க ரத்தக் காடாக காட்சியளித்ததால், கத்திகள் கட்டப்பட்டு சேவல் சண்டை நடத்தப்பட்டதா? கத்தியில் விஷம் தடவப்பட்டிருந்ததா? மேலும் பந்தயம் கட்டப்பட்டதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேர் கைது: கரூர் மாவட்டம் வாங்கல் அருகேயுள்ள சின்னகாளிபாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று (ஜன. 14ம் தேதி) சேவல் சண்டை நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த வாங்கல் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் பந்தயம் கட்டி சேவல்களை சண்டையிட வைத்து தெரியவந்தது.
கட்டளை அக்ரஹாரத்தை சேர்ந்த தீபன்ராஜ் (26), நெரூரை சேர்ந்த சந்தானம் (40), நவீன் (25), சதீஷ்குமார் (30), சின்னகாளிபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய 5 பேர் மீது வாங்கல் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து தீபன்ராஜ், சந்தானம், சதீஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்; உயிரிழந்த 2 சேவல்களை கைப்பற்றி, தலைமறைவான நவீன், சக்திவேல் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.