கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபையின், பாளையங்கோட்டை பல்சமய பணிக்குழு சார்பில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு உணவு, நீர் மோர் வழங்கல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பாளையங்கோட்டை பல்சமய பணிக்குழு சார்பில் திருச்செந்தூர் முருகன் கோயிவக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு உணவு, நீர் மோர் வழங்கப்பட்டது,
பாளை மறை மாவட்டம் பல் சமய பணிக்குழு சார்பில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடை பயணம் செல்வம் பக்த பெருமக்களுக்கு பல் சமய பணிக்குழு செயலாளர் அருட்தந்தை மை.பா.ஜேசுராஜ் தலைமையில் மாவட்ட நீதிமன்றம் எதிரே வைத்து உணவு, மற்றும் நீர் மோர் காலை 11 மணி அளவில் வழங்கப்பட்டது .
நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு பல் சமய பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங், நிர்வாக குழு உறுப்பினர்கள் அருணா சிவாஜி, வழக்கறிஞர் கந்தசாமி, ஹாஜி முகம்மது ஜமால் ஈசா, மா, டிவி. ராஜா, கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை பொருளாளர் பாலா, நாராயணம்மாள்புரம் கந்தசாமி, ஜெமிலி. அனுஷ். சுஜித்ரா, கதிர், அருணி, இந்திய தேசிய லீக் பாளை ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு, நீர் மோர் வழங்கினார்கள் .