தமிழகத்தில் பனைமரம், பனைத் தொழிலாளர்கள் மற்றும் பனையேறுவோர் மற்றும் விவசாயம் நலன் காத்திட தமிழகத்தில் மட்டுமே தொடரும் கள்ளுக்கான தடையினை நீக்கக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்✍️பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில் நிறுவணத்தலைவர் வழக்குரைஞர் கவிதா காந்தி தலைமையில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில்
தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் மற்றும் பனையேறுவோர் நலன் காத்திட தமிழகத்தில் மட்டுமே தொடரும் கள்ளுக்கான தடையினை நீக்கக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
வள்ளுவர்கோட்டம்:
தமிழ்நாட்டில் மட்டுமே தொடரும் இயற்கை பனம் பாலான
கள் தடையை நீக்க வேண்டி பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில் இந்த அமைப்பின் நிறுவனர் பனை இளவரசி வழக்குரைஞர் கவிதா காந்தி அவர்கள் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைப்பெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்ஆர் .சுபாஷ், தமிழ்நாடு நாடார் சங்கத்தின் நிறுவனர் முத்து ரமேஷ் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டியன், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஷ்வரி பிரியா, கிராமணியார் சங்க நிர்வாகிமுனுசாமி,பனையேறும் விவசாயிகள், பனை பொருள் உற்பத்தியாளர்கள், பனை ஆர்வலர்கள் விவசாயிகள் மற்றும் வியாபார சங்கங்கள் உள்ளிட்ட இதர அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கள் தடையினை நீக்கிட வேண்டும்,
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் பனை மரங்களை நட்டு அதனை பராமரிக்க வேண்டும்,
பனை தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்தப்பட்டன.