t

சிறுமியிடம் சில்மிஷம்?! ; தலையில் கல்லைப் போட்டு கொன்ற உறவினர்! -பதைபதைக்க வைக்கும் செய்தி மற்றும் கானொளி காட்சி ✍️வீடியோ ✍️

advertisement by google

சிறுமியிடம் சில்மிஷம்?! ; தலையில் கல்லைப் போட்டு கொன்ற உறவினர்! -பதைபதைக்க வைக்கும் வீடியோ

advertisement by google

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் கோபால் (வயது 50). பெயின்ட் அடிக்கும் தொழிலாளி. அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார்.

advertisement by google

கோபால், தான் வசித்து வந்த பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுமியின் உறவினர்கள், வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கோபாலை அழைத்துப் பேசியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

advertisement by google

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரான ஒரு ஆணும் அவருடன் வந்திருந்த பெண்ணும் சேர்ந்து கோபாலை சரமாரியாகத் தாக்கினார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவுக்காரப் பெண் கம்பால் தாக்கிய நிலையில், அவருடன் வந்திருந்த ஆண், கோபாலை கீழே தள்ளி அவரின் தலையில் கல்லால் தாக்கினார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை தொடர்ந்து தாக்கினர்.

advertisement by google

இது குறித்த தகவல் கிடைத்ததும் கடையநல்லூர் போலீஸார் விரைந்து சென்றனர். அங்கு கொடூரமான தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

advertisement by google

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோபாலை கொலை செய்த புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்த மாரிப்பாண்டி (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் இருந்த உறவினரான வேல்தாய் என்பவரையும் கைது செய்தனர்.

advertisement by google

கொடூரக் கொலை நடந்தபோது அங்கிருந்த சிலர் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் ஒரு நபரை தலையில் கல்லால் அடித்து கொலை செய்யும் கோரமான காட்சியைப் பார்த்து பொதுமக்கள் பதைபதைத்துப் போயுள்ளனர்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button