விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூரில் உள்ள பட்டாசு ஆலையின், 52வயது கண்காணிப்பாளர், 500ரூபாய் கொடுத்து, +2 மாணவிக்கு, பாலியல் தொல்லை✍️பட்டாசு ஆலை ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
விருதுநகர் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: பட்டாசு ஆலை ஊழியர் கைது
விருதுநகர்:
விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூரில் உள்ள பட்டாசு ஆலையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் கோபால் (வயது 52).
இந்த பட்டாசு ஆலை ஊழியர் ஒருவர் வேலைக்கு வரவில்லை. இதனால் கோபால் அந்த ஊழியர் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டார். அதன் பின்னரும் அவர் வேலைக்கு வரவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று கோபால் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது 17 வயது பிளஸ்-2 படிக்கும் மகள் தனியாக இருந்தார்.
அப்போது அவர் அந்த மாணவியிடம் ரூ.500 கொடுத்து தீபாவளிக்கு இனாமாக வைத்துக் கொள் எனக்கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவியின் தாயார் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.