t

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை கொளுத்திப்போட்டு, கிண்டல், ரகளையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சப்-இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை கொளுத்திப்போட்டு தாக்குதல்.. 4 இளைஞர்கள் கைது!

advertisement by google

விழுப்புரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை கொளுத்திப்போட்டு ரகளையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரங்கண்டநல்லூர்.

advertisement by google

இந்த ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு எதிரே திருக்கோவிலூர் – விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்திய 5 பேர் கொண்ட கும்பல், தீபாவளி அன்று பட்டாசு வெடித்து இருக்கிறது.

advertisement by google

இதனைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான் (55) அந்த கும்பலை எச்சரித்து இருக்கிறார். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசை வெடிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான்மீது பட்டாசை கொளுத்தி வீசியுள்ளனர். உடன்டியாக சுதாரித்துக்கொண்டு விலகியதால் சப்-இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏதும் எற்படவில்லை.

advertisement by google

இதனையடுத்து, பட்டாசை வீசிய இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல அவர் முயன்றார். அப்போது அந்த கும்பல் சப்-இன்ஸ்பெக்டர் டார்சானை தாக்கி இருக்கிறது. இதனைக்கண்ட சக காவலர்களாக பயிற்சி துணை ஆணையர் நமச்சிவாயம், உதவி ஆய்வாளர் புனிதவல்லி மற்றும் காவலர்கள் 4 இளைஞர்களை மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டார்.

advertisement by google

விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியது அரங்கண்டநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்த ஆகாஷ் (வயது 19), விக்னேஷ் (வயது 27), சோமு (வயது 35), ஷாநவாஸ் (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஹரிதரன் என்பவரை தேடி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button