திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், கள்ள காதலுக்கு இடைஞ்சல்..!! பெற்ற மகனையே கொன்ற கொடூர தாய்..!!,✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
கள்ள காதலுக்கு இடைஞ்சல்..!! பெற்ற மகனையே கொன்ற கொடூர தாய்..!!
கள்ளகாதலுக்காக குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம்கிராமத்தில் வசித்து வருவபர் செல்வம். இவருக்கு திருமணமாகி துர்கா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. இதனால் துர்கா தனது தாய் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார்.
இதனை அடுத்து அவரது மகன் சூர்யா சில நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளான் இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவனை தேடியுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள குளத்தில் அழுகிய நிலையில் சிறுவனின் உடல் கண்டேடுக்கப்பட்டது. அது சூர்யாவின் உடல் என்பது உறுதியானதால் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தினர்.
இதனை அடுத்து கோபாலகிருஷ்ணன் என்பவர் சூர்யாவை சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரணை மேற்கொண்டது காவல்துறை.
அப்போது தான் துர்காவுக்கு கோபாலகிருஷ்ணனுக்கும் கள்ள தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தனிமையில் இருக்கும் போது சூர்யா பார்த்துவிட்டதாகவும் அதனை அனைவரிடமும் சொல்லிவிடுவதாக கூறியதாலும் துர்கா தனது மகனையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கோபாலகிருஷ்ணன் சூர்யவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை அருகில் உள்ள குளத்தில் வீசியுள்ளார். இது சூர்யாவிற்கு தெரிந்திருந்தாலும் சந்தேகம் வரகூடாது என்பதற்காக நடித்துள்ளார்.
இவர்கள் அளித்த வாக்குமூலத்தை அடுத்து இவருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.