t

மதுபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர்✍️ அலட்சியமாக பேருந்தை இயக்கிய அதிர்ச்சி சம்பவம்✍️ போதையில் நிற்க முடியாமல் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மதுபோதையில் தெருக்களை அளந்து வந்த பேருந்து.. போதையில் நிற்க முடியாமல் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்..!

advertisement by google

மதுபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர், அலட்சியமாக பேருந்தை இயக்கிய அதிர்ச்சி சம்பவம் நாகையில் நடந்துள்ளது.

advertisement by google

நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தை இன்று ஓட்டுநர் செல்லமுத்து என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து, பழைய பேருந்து நிலையம் அருகே வருகையில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

advertisement by google

பின்னர், பேருந்து ஓட்டுநர் எப்படியோ சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்திவிடவே, பதறிப்போன பயணிகள் ஓட்டுனரை சூழ்ந்துகொண்டுள்ளனர். மேலும், அவரிடம் பேசுகையில் மதுபான வாடை வந்துள்ளது. இதனால் அவர் மதுபோதையில் இருப்பது உறுதியானது.

advertisement by google

பேருந்து ஓட்டுனரை சட்டையைபிடித்து பேருந்தில் இருந்து இறங்குகையில், அவரால் நிற்க முடியாமல் தள்ளாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய காவல் துறையினர், நாகப்பட்டினம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

advertisement by google

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஓட்டுநர் செல்லமுத்துவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த தகவல் போக்குவரத்து கழக பணிமனைக்கும் தெரியப்படுத்தவே, பணிமனை கிளை பொறியாளர் மற்றும் கிளர்க் ஆகியோர் வந்து காவல் துறையினரிடம் பேசினார்.

advertisement by google

மேலும், துறை ரீதியான நடவடிக்கை ஓட்டுனரின் மீது எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், அவர்களுடன் பேருந்து ஓட்டுநர் செல்லமுத்து அனுப்பி வைக்கப்பட்டார். மதுபோதையில் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இயக்கியது பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button