சொகுசு அறை கேட்ட சிவசங்கர்!*
ஹைலைட்ஸ்:
சிவசங்கருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறை திரும்பினார்
சிறையில் கூடுதல் வசதிகள் கொண்ட முதல் வகுப்பு அறையை ஒதுக்க வேண்டும்
மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ‘சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் சிலரும் இதற்கு உடந்தை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இரண்டில் அவர் சிறைத்தண்டனையை பெற்று வருகிறார். சிவசங்கர் தவிர, இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பெண் ஆசிரியைகளும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதற்கிடையே, ஜாமீன் வழங்கக் கோரி சிவசங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
கோவை: குழந்தை கொடுத்துவிட்டு தாலி கட்ட மறுப்பு: Ex Mla மருமகன் மீது பரபரப்பு புகார்..!
இதனிடையே, சிவசங்கருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறை திரும்பினார். இந்த நிலையில், சிறையில் கூடுதல் வசதிகள் கொண்ட முதல் வகுப்பு அறையை ஒதுக்க வேண்டும் என்று சிவசங்கரின் வழக்கறிஞர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் அவர் சார்பாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி தமிழரசி, அம்மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.