கோவை: காட்டு பன்றியை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது..!
தமிழக வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடி சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடவேண்டாம் என காடோர கிராமங்களில் வனத்துறையினர் எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும், காட்டு விலங்குகளை வேட்டையாடி பணம் சம்பாதிக்கவும், சமைக்கவும் ஒரு சிலர் விதிமீறி வேட்டைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் இலுப்பநத்தம் கிராமத்தில் நாட்டு வெடியை பயன்படுத்தி, காட்டு பன்றியை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் குவாட்டரின் விலை 10 ரூபாய் வரை உயர்வு?
அவர்களிடமிருந்து 17 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசராணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களிடம் நாட்டு வெடிகுண்டு எப்படி வந்தது? அவற்றை எங்கிருந்தாவது வாங்கியுள்ளார்களா அல்லது அவர்களே தயாரித்தார்களா என்பதை குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.