அவள் இல்லாம நான் இல்லை… கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை✍️ விபரீதமாக எடுத்த முடிவினால்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
அவள் இல்லாம இருக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!
கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் வாழ்க்கையை வெறுத்த ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.