மேலும் ,மேலும் ,பெரும் சர்ச்சையில் பாலியல் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பழங்காலமாக தொடர்ந்த, பாலியல் சர்ச்சையில், சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு என தகவல்✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு என தகவல்..!*
சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பக்தை சுஷ்மிதா என்ற பெண்ணும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே டேராடூனில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபாவை சென்னை சிபிசிஐடி போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
தமிழகத்தை புரட்டிப்போடும் கைது சம்பவங்கள்..! ராஜகோபாலன் முதல் பப்ஜி மதன் வரை…
அவரை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சிவசங்கர் பாபாவுக்கு டேராடூனில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் அவரை கைது செய்யும் முன்பு வரை சிவசங்கர் பாபா நோயாளி உடையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.