t

பட்டப்பகலில் பழிக்கு பழியாக ஓட ஓட விரட்டி இளைஞரை சரமாரியாக கொடூரமாக வெட்டிக்கொலை✍️ குன்றத்தூரில் கொரானாவிலும் அதிர்ச்சி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பழிக்குப் பழி: பட்டப்பகலில் ஓட, ஒட விரட்டி இளைஞர் சரமாரி வெட்டிக்கொலை!*

advertisement by google

பழிக்கு பழிவாங்கும் விதமாக, பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

advertisement by google

குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (36), அதே பகுதியிலுள்ள கிரசரில் வேலை செய்து வந்தார். இன்று மதியம் தனது நண்பர் தண்டபாணி என்பவருடன் வேலை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், பயங்கர ஆயுதங்களுடன் தனசேகரை நோக்கி ஓடி வந்தனர்.

advertisement by google

இதை கண்டதும் தனசேகர் மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த காலி இடத்திற்கு இறங்கி ஓடினார். அவரது நண்பரும் இறங்கி ஓடினார். ஆனால் அந்தக் கும்பல் தனசேகரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினர்.

advertisement by google

ரத்த வெள்ளத்தில் சரிந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

advertisement by google

கடந்த 2018ஆம் ஆண்டு இதே பகுதியில் ரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனசேகர் கைது செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக தற்போது தனசேகரை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button