கடன் ரத்தான நகைகளை திரும்பக் கொடுக்கவேண்டி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை மனு✍️முழுவிவரம் – விண்மீன் நியூஸ் —————————-
கடன் ரத்தான நகைகளை திரும்பக் கொடு! ——————————————கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது முந்தைய அரசு. அதற்கான அரசாணை போடப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள், நகைகளை அடகு வைத்திருந்த விவசாயிகளுக்கு, அவர்களது நகைக் கடன் தள்ளுபடி ஆகியுள்ளது என தாள்களையும் அனுப்பி விட்டார்கள். அதற்குள் திடீரென தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவித்து விட்டது. ஆகவே, ” தள்ளுபடிக்கான சீட்டு கைக்கு வந்தும் விவசாயிகளுக்கு நகை வந்து சேரவில்லை. அந்த நகைகளை மீட்டு, மீண்டும் அடகு வைத்து, கடனாகப் பணம் பெற்றுத்தான், இந்த நெருக்கடி நேரத்தில், விவசாயம் செய்ய வேண்டும் என்ற நிலையில், விவசாயிகள் உள்ளனர்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது விவசாயிகள் வைத்துள்ள நகைகளை தள்ளுபடி லிஸ்ட் , கொடுத்த பிறகும் இன்னும் விவசாயிகளுக்கு நகைகளை திருப்பி கொடுக்கவில்லை கூட்டுறவு அதிகாரிகள்
தள்ளுபடி லிஸ்டில் வந்த நகைகளை விவசாயிகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் மேலும் இந்த நகைகளுக்கு ஏதும் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது அதை அதைத் தவிர்த்து விவசாயிகளிடம் நகைகளை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் மேலும் விவசாயிகள் விவசாயம் செய்து அதற்கு திரும்பவும் நகைகளை கடன் வாங்க உத்தேசித்து வரும் இந்த நிலையில் நகைகளைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்தால் விவசாயிகளுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எத்தனை நாட்களுக்கு திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறார்களோ அத்தனை நாட்களுக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு தரவேண்டும் உடனடியாக அந்தந்த மாவட்டத் ஆட்சித் தலைவர் அவர்களும் கூட்டுறவு சங்க அதிகாரிகளும் விவசாயிகளின் நகைகளை காலதாமதம் இல்லாமல் உடனடியாக திருப்பித் தர வேண்டுகிறோம்
O.A.நாராயண சாமி
மாநிலத் தலைவர்
தமிழ் விவசாயிகள் சங்கம்