உறவுகள்

இல்லற தாம்பத்திய உறவுக்கு பிறகு பிடிப்பு அல்லது வலி ஏற்படுகிறதா✍️காரணம் என்ன…✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

உடலுறவுக்கு பிறகு பிடிப்பு அல்லது வலி ஏற்படுகிறதா? காரணம் என்ன…

advertisement by google

உடலுறவின் போதும் மற்றும் அதற்குப் பின்னரும் வரும் புலம்பல்கள் (முனகுதல்), எப்போதும் இன்பத்தைப் பற்றியதாக இருக்காது. குறிப்பாக சொல்லவேண்டும் எனில், இந்த வலி ஆனது பிடிப்புகளால் ஏற்படலாம். இந்த மாதிரியான பிடிப்புகளை நீங்கள் உடலுறவுக்கு பின்பு அனுபவித்து வருகிறீர்கள் என்றால், ஒரு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில், இது உங்கள் பாலியல் ஆரோக்கியத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்பதற்கான ஒரு அடையாளமாக கூட இருக்கலாம்.

advertisement by google

​வலி அல்லது பிடிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

advertisement by google
  1. எஸ்.டி.ஐ (பாலியலால் பரவும் நோய்த் தொற்றுகள்)

ஒரு சில எஸ்.டி.ஐ. க்கள் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த எஸ்.டி.ஐ. க்களில் கிளமிடியா, ஹெபடைடிஸ் மற்றும் பிஐடி ஆகியவை அடங்கும்.

advertisement by google
  1. வெஜினிஸ்மஸ்

இது ஒரு மருத்துவ நிலை ஆகும். இந்த நிலையில், ஒரு பெண்ணின் வெஜினாவை சுற்றி உள்ள தசைகளில் தானாகவே தசைப்பிடிப்பு ஏற்பட தொடங்குகின்றன. எனவே, இந்த நிலையில் உள்ள ஒருவருக்கு உடலுறவு வைத்து கொள்வது என்பது வேதனையாக இருக்கலாம். கூடுதலாக, உடலுறவுக்குப் பிறகும் தசைகள் தொடர்ந்து வலிக்கக்கூடும்.

advertisement by google
  1. ஆர்கசம்

ஆர்கசத்தின் போது, வெஜினா தசைகள் ஆனது ஒரு தாள முறையில் நகரும். சில நேரங்களில், தசைப்பிடிப்புக்கு இது கூட காரணமாக அமையலாம்.

advertisement by google
  1. எண்டோமெட்ரியோசிஸ்

கருப்பையின் உட்சுவரில் இருக்க வேண்டிய திசுக்கள், கருப்பைக்கு வெளியே இடுப்பு பகுதியில் காணப்படும் ஒரு நிலை தான் எண்டோமெட்ரியோசிஸ் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கூட, ஒருவர் உடலுறவின் போதும் அல்லது அதற்குப் பின்னரும் வலியை அனுபவிக்கலாம்.

advertisement by google
  1. ஆழமான ஊடுருவல்

வழக்கத்தை விட, ஆழமாக ஊடுருவக்கூடிய சில பாலியல் நிலைகள் உள்ளன. ஊடுருவலின் போது கருப்பை வாய் ஆனது மிகவும் கடுமையாக தாக்கப்பட்டால், அது வலி அல்லது தசைப்பிடிப்பை ஏற்படுத்தும்.

  1. ஃபைப்ராய்டு (நார்த்திசுக்கட்டிகள்)

ஃபைப்ராய்டு என்பது கருப்பையின் சுவரில் வளரும் ஒரு சிறு கட்டிகள் ஆகும். இவை தீங்கற்றவை மற்றும் உடலுறவின் போது இவற்றால் ஏற்படும் வலியானது மிகவும் மோசமானதாக காணப்படும்.

  1. உணர்ச்சி ரீதியான காயங்கள்

உணர்ச்சி ரீதியான காயங்கள், உங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்; அதன் அளவை நீங்கள் உணராவிட்டாலும் கூட. இது, உடலுறவின் போதும் அல்லது அதற்குப் பின்னரும் வலி மற்றும் தசைப்பிடிப்பை வெளிப்படுத்தும்.

  1. மாதவிடாய் காலத்தில்

நீங்கள் உங்களின் மாதவிடாய் நாட்களில் இருக்கும்போது தசைப்பிடிப்பு ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்றாகும். நீங்கள் மாதவிடாய் சமயத்தில் உடலுறவில் ஈடுபட்டால், பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது; மற்றும் இது முற்றிலும் சாதாரணமானதாக கருதப்படுகிறது.

​வலியை சமாளிக்க

உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலியை எதிர்த்துப் போராடுவதற்கான சில எளிய குறிப்புகள் இங்கே:

  1. ஒத்தடம்

ஒருவர், உடலுறவுக்குப் பின் தசைப்பிடிப்பு மற்றும் வலியை அனுபவித்து வந்தால், தசைகளைத் தளர்த்த வெப்பமூட்டும் திண்டை பயன்படுத்தலாம். இது உங்கள் இடுப்பு அல்லது அடிவயிற்று பகுதியில் உள்ள வலியைப் போக்க உதவும்.

  1. சூடான தண்ணீரில் குளியுங்கள்

பொதுவாகவே, ஏதேனும் தசைப்பிடிப்புகள் அல்லது வலியை நீங்கள் எதிர்கொண்டால், சூடான தண்ணீரில் குளிக்கலாம். இவ்வாறு சூடான தண்ணீரில் குளிப்பது, நீங்கள் வலியில் இருந்து நிவாரணம் பெற உங்களுக்கு உதவும்.

மருந்துகளை முயற்சிக்கவும்:

வெப்பமூட்டும் திண்டுகள் மற்றும் சூடான குளியல் போன்றவை வேலை செய்யாவிட்டால், வலியைப் போக்க மருந்துகள் உங்களுக்கு உதவக்கூடும்.

​மகப்பேறு நிபுணருடன் ஆலோசனை செய்யவும்

இந்த வலியானது உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டாலோ, அல்லது நீங்கவில்லை என்றாலோ நீங்கள் ஒரு மருத்துவரை நிச்சயமாக சந்திக்க வேண்டும்.

உடலுறவு என்பது ஒருவர் அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஆனால், அது ஒரு துன்பகரமான அனுபவமாக இருக்கக்கூடாது. உடலுறவுக்குப் பிறகு எப்பயாவது ஒருமுறை பிடிப்பை அனுபவிப்பது, ஒரு கவலைக்குரிய விஷயம் கிடையாது. ஆனால், உடலுறவு வைத்து கொள்ளும் போது தொடர்ந்து வலியை அனுபவிப்பது இயல்பானதல்ல. இது, உங்கள் பாலியல் வாழ்க்கையுடன் சேர்த்து, உங்கள் காதல் வாழ்க்கையையும் பாதிக்கக் கூடும்.

மேலும், உடலுறவின் போது நீங்கள் எப்போதும் வலியை அனுபவிக்கத் தொடங்கினால், உங்கள் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; பிடிப்புகள் மற்றும் வலியின் தீவிரத்தை கவனியுங்கள்; நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் பற்றிய தகவல்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் மாதவிடாய் நாட்களை கண்காணியுங்கள்; மற்றும் வேறு ஏதேனும் அசாதாரணங்கள் குறித்தும் கண்காணியுங்கள். மேலும், உங்கள் மகப்பேறு நிபுணருடன் நீங்கள் ஆலோசனை செய்யும் போது, இந்த தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button