கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் எடுத்து செல்லப்பட்ட நிலையில், அவசர ஊர்தி உதவியாளர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நோயாளியின் உடல்நிலையை பயன்படுத்தி, ஆம்புலன்சில் பாலியல் தொல்லை.. காமுகன்களாக கயவர்கள்.!!*
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நெருக்கடியான சூழ்நிலையிலும் பெண்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் அவசர ஊர்திகளில் வைத்து பாலியல் தொல்லை கொடுப்பது, பாலியல் பலாத்காரம் செய்வது என்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் எடுத்து செல்லப்பட்ட நிலையில், அவசர ஊர்தி உதவியாளர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தனியாக மருத்துவமனைகளுக்கு அவசர ஊர்தியில் அழைத்துச்செல்லப்படும் நிலையில், இவ்வாறான சூழ்நிலையில் பெண்கள் வீட்டில் இருந்து அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது அம்பலமானது.
கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் உள்ள மலப்புரத்தை சார்ந்த பெண்மணி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதி எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க அவசர ஊர்தியில் மருத்துவர்கள் அழைத்து சென்று வர முடிவு செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அவசர ஊர்தியில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசாந்த் (வயது 35) பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சம்பவத்தின் போது பெண்மணி மிகுந்த உடனலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் புகார் அளிக்க முடியவில்லை. இதனையடுத்து, கடந்த மே 13 ஆம் தேதி மருத்துவர்களிடம் விஷயத்தை கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கடந்த வருடம் பத்தினம்திட்டாவில் 19 வயது இளம்பெண்ணை அவசர ஊர்தி ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும்முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.