தக்கலையில் பொது இடத்தில் தோசை கரண்டி தாக்குதல்✍️பஸ் ஸ்டேண்டை அலறவிட்ட பெண்கள்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
தக்கலையில் பொது இடத்தில் தோசை கரண்டி தாக்குதல்..! பஸ் ஸ்டேண்டை அலறவிட்ட பெண்கள்*
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் ராமன்பரம்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். பத்மநாபபுரம் நகர பாஜக முன்னாள் தலைவரான, இவரது கடையில் வேலை பார்த்து வந்த இரு பெண்களில் ஒரு பெண்ணுக்கு திடீரென வேலை வழங்கவில்லை என தெரிகிறது.
இதனால், ஏற்கனவே வேலை பார்த்ததற்கான சம்பளம் கேட்டு இன்று கடைக்கு வந்த அப்பெண், பணத்தை கேட்டு முறையிட்டார். அப்போது கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வேறொரு பெண்ணுக்கும், இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அதன் உச்ச கட்டத்தில் ஒரு பெண் மற்றொரு பெண்ணை அகப்பையால் திடீரென தாக்கினார். உடனே பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் தாக்கப்பட்ட பெண்ணை தாக்குதலில் இருந்து மீட்டு அனுப்பி வைத்தனர்.
எனினும் அவர் பையோடு வந்தபின் மீண்டும் தாக்க முயற்சித்தாலும் பொதுமக்கள் தடுத்ததால் மீண்டும் தாக்க இயலவில்லை.
ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று கொண்டிருந்த பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை மற்றொரு பெண் அகப்பையால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.