இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி சிகால் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து – பல கோடி ரூபாய் பொருட்கள் நாசம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி சிகால் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து – பல கோடி ரூபாய் பொருட்கள் நாசம்

advertisement by google

✍தூத்துக்குடியில் சிப்காட் பகுதியிலுள்ள சிகால் சி.எஃப்.எஸ்-ல் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

advertisement by google

✍தூத்துக்குடி சிப்காட் பகுதியில் சிகால் சி.எஃப்.எஸ் என்ற குடோன் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சரக்குகளும் மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதியாகக்கூடிய சரக்குகளும் இங்குள்ள குடோன்களில் வைக்கப்பட்டு, பின்னர் கன்டெய்னரில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்த குடோனில் கார்மென்டஸ் துணிகள் வைக்கப்பட்டிருந்தன.
இன்று மதியம் திடீரென ஒருபகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது,

advertisement by google

✍இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ வேகமாக பரவத்தொடங்கி குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கின. இதில் 10 கோடிக்கும் மேல் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 6 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்து குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button