அதிமுக பண மூட்டைகளை நம்பியே தேர்தலை சந்திப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடம்பூர் ராஜூவின் வாகனத்தை சோதனை செய்த அதிகாரிகள் இடமாற்றம் செய்தது அதிகார துஷ்பிரயோகம் என சாடினார்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் கூறினார். அதிமுக பண மூட்டைகளை மட்டுமே நம்பி தேர்தலை சந்திப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். நாளை பிற்பகல் 1.30 மணிக்கு கோவில்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் நாளை மாலை கோவில்பட்டியில் இருந்தே தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளதாக கூறினார். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்; மக்கள் தான் தீர்ப்பு வழங்குவார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அந்த மாற்று சக்தியாக அமமுக இருக்கும். அமமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள் எனவும் டிடிவி தினகரன் கூறினார்.