கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
♻️ கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
♻️இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
♻️கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த வள்ளிநாயகம் மகன் பிச்சைமுத்து (47) என்பவர் கடந்த 02.03.2021 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ரூ. 40,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை காணவில்லை என அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருவனந்தபுரம் மாவட்டம், முள்ளி புதூர் பகுதியைச் சேர்ந்த சாலமோன் ராஜா மகன் இட்டம் சோனி (எ) சோனி (43) என்பவர் வாகனத்தை திருடியது தெரியவந்தது.
♻️ இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குருச்சந்திர வடிவேல் வழக்கு பதிவு செய்து இட்டம் சோனி (எ) சோனியை கைது செய்தார்.மேலும் அவரிடம் இருந்து திருடுபோன இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.