பொள்ளாச்சியிலுள்ள வெள்ளியங்கிரி மலையிலிருந்து வந்த சிவன் ஆதியோகி திருத்தேர்,பொள்ளாச்சி பகுதியில் ஊர்வலம் வந்தது✍️பொதுமக்கள் பக்தியில் ஆழ்ந்து கொண்டாட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பொள்ளாச்சி: வெள்ளியங்கிரி மலையிலிருந்து வந்த சிவன் ஆதி யோகி திருத்தேர் பொள்ளாச்சி பகுதியில் ஊர்வலம் வந்தது
. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவை ஈஷா யோக மையம் தென்கைலாய வெள்ளியங்கிரி மலையிலிருந்து சிவன் ஆதி யோகி திருத்தேர் பொள்ளாச்சி வந்தது.
நேற்று இரவு ஜோதி நகர் விவேகானந்தா கலை மற்றும் நற்பணி மன்றம் சார்பில் `ஈசனுடன் ஒரு பனித்துளி’ என்ற திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது.
பொள்ளாச்சி தென்றல் நகர் விநாயகர் கோயிலில் துவங்கிய இந்த ஊர்வலமானது 100 அடி ரோடு, பி.கே.எஸ்.காலனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்த ஈசனை குடும்பத்துடன் வந்திருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர். நாளை இந்த தேர் வெள்ளியங்கிரி மலைக்குள் செல்ல உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.