கோவில்பட்டி மேம்பாலத்தில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் மணிமுத்தாறு பட்டாலியனில் பணியாற்றும் தலைமை காவலர் உயிரிழப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் பைக் விபத்தில் காவலர் உயிரிழப்பு
கோவில்பட்டி மேம்பாலத்தில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் மணிமுத்தாறு பட்டாலியனில் பணியாற்றும் தலைமை காவலர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் அஜித்குமார்(30). இவர் மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று மதுரை – திருநெல்வேலி நான்குவழிச்சாலையில் திருநெல்வேலி மார்க்கமாக மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டி இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் உள்ள வளைவில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், உதவி ஆய்வாளர்கள் ஆர்தர் ஜஸ்டின், ராமச்சந்திரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அஜித்குமார் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அஜித்குமாருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். அஜித்குமாரின் தந்தை அய்யப்பன் நாகர்கோவில் டி.எஸ்.பி. அலுவலகத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.