ரஜினி அரசியலுக்கு முழுக்கு:உடல்நிலை சரியில்லாமல் போனதை, ஆண்டவன் எனக்குக் கொடுத்து எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ரஜினி அரசியலுக்கு முழுக்கு:
அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக ரஜினி அறிவிப்பு.
“உடல்நிலை சரியில்லாமல் போனதை, ஆண்டவன் எனக்குக் கொடுத்து எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.
ரசிகர்களுக்கும், மக்களுக்கும் எனது முடிவு ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்.
என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், அது மாற்று சிறுநீரகத்தை கடுமையாகப் பாதிக்கும்.
கட்சி ஆரம்பித்து சமுக வலைதளங்களில் மட்டுமே பரப்புரை செய்தால் நான் எதிர்பார்க்கும் எழுச்சியை ஏற்படுத்த முடியாது.
கட்சி தொடங்கினால் என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்வோர் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.
மக்கள் மன்றம் என்றும்போல செயல்படும்.
தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதைச் செய்வேன்.
கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பை வெளியிடும்போது ஏற்பட்ட மனவலி எனக்கு மட்டும்தான் தெரியும்.
ரசிகர்களும் தமிழக மக்களும் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”
-ரஜினி