தலையில்லாமல் நடந்து சென்ற ஒரு விசித்திர மனித உருவம்✍️ பொதுமக்கள் அஞ்சியதாக இவரைப் பற்றிய ஒரு கட்டுரை✍️ ஆன்டிபயாட்டிக் மருந்தும் விசித்திர மனிதரும்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஆன்டிபயாட்டிக் மருந்தும் விசித்திர மனிதரும்
மலேசியாவில், பேராக் மாநிலத்தில், ஈப்போ மாநகரில் மேலே படத்தில் காணப்படும் நபரை எதட்சையாக சந்தித்தேன். திரைப்படம் பார்க்கத் திரையரங்கு ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர் அந்த திரையரங்கின் வாசலில் சிறிய அளவில் நொறுக்குத் தீனிகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
தலையில்லாமல் நடந்து சென்ற ஒரு உருவத்தைக் கண்டு ஒருவர் அஞ்சியதாக இவரைப் பற்றிய ஒரு கட்டுரை புகைப்படத்துடன் வெளிவந்தது, அதை வாசித்திருக்கிறேன். அதன் மூலம் அறிமுகமானதால் இவருக்கு என்ன நடந்தது? எதனால் இவரின் தலை கழுத்தோடு நிற்கவில்லை? எதனால் இவரின் தலை தொங்குகிறது? என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது.
இவற்றை அவரிடம் விசாரித்த போது அவர் கூறியவையாவது; அவர் இளைஞனாக இருந்த போது நோய்கள் எதுவும் தன்னை அண்டிவிடக் கூடாது என்பதனால் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆங்கில மருத்துவரை நாடி ஆன்டிபயாட்டிக் ஊசியை தனது இடுப்புவழியக உடலுக்குள் செலுத்திக் கொள்வாராம்.
சில வருடங்கள் இதுபோன்ற ஆன்டிபயாட்டிக் ஊசிகளைப் போட்டுக் கொண்டதும், இவரின் உடல் தளர தொடங்கியதாம். அந்த குறிப்பிட்ட ஆங்கில மருத்துவரிடம் இதைப்பற்றி கேட்ட பொழுது, தனக்கு காரணம் தெரியவில்லை ஆனால் இனிமேல் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
அவருக்கு நன்மை செய்யும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நம்பி அவர் உடலுக்குள் செலுத்திக் கொண்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் அவரின் உடலைச் சிதைத்து, உடலின் ஆரோக்கியத்தைச் சிதைத்து, அவரின் வாழ்க்கையையும் சிதைத்து விட்டன.
நோயெதிர்ப்பு சக்தியை சிதைந்து, நரம்புகளைச் சிதைத்து, நரம்பு மண்டலத்தில் உண்டான பாதிப்பால் தலை கழுத்தில் நிற்காமல் தொங்குகிறது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் பக்கவிளைவுகளுக்கு இவர் ஒரு உதாரணம்.
Antibiotic மருந்து என்பது என்ன?
Antibiotic மருத்துவத்திற்கு wikipedia இணையத்தளம் கொடுக்கும் விளக்கம்.
“An antibiotic is a type of antimicrobial substance active against bacteria. It is the most important type of antibacterial agent for fighting bacterial infections, and antibiotic medications are widely used in the treatment and prevention of such infections.”
சுருக்கமாகச் சொல்வதானால் உடலில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொல்வதற்கான மருந்து. மனித உடலில் நோய்கள் உருவாக நுண்ணுயிரிகள் காரணமாக இருக்கின்றன என்ற ஆங்கில மருத்துவத்தின் நம்பிக்கையின் காரணமாக இந்த மருந்து வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மனித உடலுக்கும் மாத்திரை அல்லது ஊசி வடிவில் செலுத்தப்படும் இவ்வகையான மருந்துகளுக்கு சிந்தனை ஆற்றல் இருக்குமா? சரி தவறு தெரியுமா? எவையெல்லாம் நல்ல நுண்ணுயிர்கள்? எவையெல்லாம் தீய நுண்ணுயிர்கள் என்பது தெரியுமா?
நுண்ணுயிர்களைக் கொல்ல பயன்படும் இவ்வகையான மருந்துகள் நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்களை மட்டும் தேடிக் கொல்லுமா, அல்லது உடலில் இருக்கும் அனைத்து வகையான நுண்ணுயிர்களையும் கொல்லுமா?
மனித உடலில் இயக்கத்துக்கும், உடலின் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடிய பல்லாயிரக் கணக்கான நுண்ணுயிர்கள் உடலில் இயங்குகின்றன, அவற்றையும் சேர்த்துத்தானே இந்த மருந்துகள் கொல்லும்?
Biotic பையோடிக் என்றால் உயிர் சக்தி, நுண்ணுயிர்கள் அல்லது உயிர்கள் என்று பொருள் கொள்ளலாம். (Antibiotic) ஆன்டிபயாட்டிக் என்றால் உயிராற்றலுக்கு எதிரானது அல்லது உயிர்களுக்கு எதிரானது என்று பொருள் கொள்ளலாம்.
உடலில் நோய்களை அல்லது தொந்தரவுகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் என்று நம்பி பரிந்துரைக்கப்படும் இந்து ஆன்டிபயாட்டிக் ஊசி மற்றும் மாத்திரைகள் உடலில் உள்ள கெட்ட மற்றும் நல்ல நுண்ணுயிர்களையும் சேர்த்தே அழித்து விடுகின்றன. அவரில் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் நல்ல நுண்ணுயிர்களும் அழிந்து சில வேளைகளில் கொடிய, நாட்பட்ட மற்றும் தீர்க்க முடியாது நோய்களும் உருவாகின்றன.
உடலின் உயிர் சக்தியை அல்லது நோயெதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துவது மற்றும் சிதைப்பது ஒரு மருத்துவம் என்று நம்பி அந்த மருத்துவத்தை மேற்கொள்ளும் மனிதர்களும்.
உடலின் உயிர் சக்தியை அல்லது நோயெதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தும் மற்றும் சிதைக்கும் இரசாயனங்களை நோய் தீர்க்கும் மருந்தாக நம்பி உடலுக்குள் செலுத்திக் கொள்ளும் மனிதர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள்.
உடலின் உயிர் சக்தியை அதிகரிப்பது வைத்தியமா அல்லது உடலின் உயிர் சக்தியைச் சிதைப்பது வைத்தியமா? நோயெதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துவது வைத்தியமா அல்லது நோயெதிர்ப்பு சக்தியை கெடுப்பதும் பலகீன படுத்துவதும் மருத்துவமா? சிந்தித்துப் பாருங்கள், உங்களுக்கு இந்த மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களிடம் கேளுங்கள்.
இந்த மருந்துகள் உடலின் தீய விசயங்களை மட்டுமே அழிக்கும் என்று மருத்துவர்கள் கூறினால். நல்ல பாக்டீரியா மற்றும் கெட்ட பாக்டீரியாக்களைப் பிரித்துப் பார்க்கும் அறிவு அந்த மருந்துகளுக்கு உண்டா? அவை எவ்வாறு நல்லது கெட்டதை பிரித்துப் பார்க்கும் என்று கேளுங்கள்.