புதியமுத்தூரில் சிறுவர்கள் இருவரை காணவில்லை பொதுமக்கள் பதட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சிறுவர்கள் இருவரை காணவில்லை*
புதியபுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல அரசரடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி பூரணம் என்பவரது குழந்தைகளான அருண் சுரேஷ் (12) மற்றும் அருண் வெங்கடேஷ் (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் இன்று (11.11.2020) மதியம், செல்வராஜ் க்கு சொந்தமான மேல அரசரடி பகுதியிலுள்ள வெங்கடேஷ் ஹோட்டலில் அவர்களது வீட்டிற்கு உணவு வாங்கி மீண்டும் வீட்டிற்கு திரும்ப வராமல் காணாமல் போயுள்ளனர்.*
இதுகுறித்து காணாமல் போன சிறுவர்களின் தாயார் திருமதி. பூரணம் அளித்த புகாரின் பேரில் புதியமபுத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுவர்களை தேடி வருகின்றனர்.*
மேற்படி காணாமல்போன சிறுவர்கள் இருவரும் கருப்பு கலர் டீ சர்ட்டும், அதில் அருண் வெங்கடேஷ் வயலட் கலர் அரைக்கால் சட்டையும், அருண் சுரேஷ் சிமெண்ட் கலர் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தனர். இச்சிறுவர்களை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கு தொடர்புகொள்ளவும்.*
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9498195125, 9498195688*