“பசி பயலே”
“பசி எனும் ஓர் பெரும் பாவிப்பயலே துன்பெறும் ஒர் படுபாவிப் பயலே ஆபத்தெனும் பொய்ப் பயலே.”
?___
பசி என்னும் பெரும் பாவி அற்பப் பயலே துன்பம் எனும் படுபாவி பயலே. ஆபத்தென்னும் பொய்யான பையலே மனதை வருத்தும் மன நிலை எனும் கீழான பயலே. தடைசெய்யும் பயலே நோய் செய்யும் வளிய இடர் எனும் வலிமையுடைய பயலே என் பக்கத்தில் நீங்கள் நிற்க வேண்டாம். கெடுவது உமது கருத்தாயின் இப்பொழுதே என்னை விட்டு நீங்கி நாடு கண்டறியாத காட்டுக்கு ஓடி விடுங்கள் இளகும் மனம் உடைய என்னை நீங்கள் அறிய மாட்டீர்.
என்று விரட்டினார் வள்ளல் பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் பகுதியில் உரைநடையில் கூறுவது.
சீவர்கள் பசி ,தாகம், இச்சை, எளிமை, கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகும்.
? வள்ளல் பெருமான் ! ?