தூத்துக்குடி வேளாங்கண்ணி மாதா தங்கத்தேர் கெபி திருவிழா, பொதுமக்களின் ஒற்றுமையுடன் ,பக்தர்களின்றி கொடியேற்றம் நடைபெற்றது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி வேளாங்கண்ணி மாதா தங்கத்தேர் கெபி திருவிழா, பக்தர்களின்றி கொடியேற்றம் நடைபெற்றது
✍தூத்துக்குடி SS.மாணிக்கபுரத்தில் சர்வமதத்தினரும் நம்பிக்கையுடன் வணங்கி வரும் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா தங்கத்தேர் கெபியின் 38ம் ஆண்டு திருவிழா பக்தர்களின்றி, கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
✍இந்த திருவிழாவானது ஆண்டு தோறும் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா திருவிழா வழிபாட்டு முறையை பின்பற்றி கொண்டாடப்பட்டு வரும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக இப்பகுதியில் திகழ்கிறது ஆகஸ்ட் 29ல் கொடி ஏற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ல் கொடி ஏற்றத்துடன் நிறைவு பெறுவது பாரம்பரிய நிகழ்வாகும். இவ்விழாவில் செப்டம்பர் 6ல் தேர்பவனியும் , 7ல் அசன விருந்தும் , 08ல் திருவிழா திருப்பலியும் சிறப்பு நிகழ்வுகளாக நடைபெறுவது வழக்கம். இந்த பகுதியில் நடைபெறும்
✍இத்திருவிழாவில் அனைத்து சமூக மக்களும் ஒன்று கூடி வேளாங்கண்ணி மாதாவுக்கு திருவிழா கொண்டாடுவதால் இப்பகுதியில் இவ்விழா புகழ் பெற்றதாக திகழ்கிறது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாக, அரசும், மாவட்ட நிர்வாகமும் திருவிழா நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளதால் இந்தாண்டு திருவிழா நடைபெறவில்லை, மேலும் மாதாவின் கொடியை பக்தர்களின்றி கமிட்டி நிர்வாகிகள் 5நபர்கள் மட்டும் நின்று சமூக இடைவெளியுடன் கொடி ஏற்றினர். ஆனாலும் கொடியேற்றத்திற்கு பின், ஆண்டு தோறும் நடைபெறும் 10நாள் திருவிழாவில் வேறு எந்த ஒரு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படவில்லை என்பதனால் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.