இந்தியா, சீனா இடையே மோதலால் விவோ நிறுவனத்திற்கு சிக்கல்..IPL ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக விவோ முடிவு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
இந்தியா, சீனா இடையே மோதலால் விவோ நிறுவனத்திற்கு சிக்கல்..IPL ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக விவோ முடிவு..!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்சரில் இருந்து விலகிக் கொள்ள விவோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வருட IPL 2020 தொடர் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என BCCI அறிவித்தது. இந்நிலையில் இந்தியா, சீனா இடையே ஏற்பட்ட மோதலினால் நாடு முழுவதும் சீனப்பொருட்களை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நேரத்தில் சீன மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனத்தையும் தடை செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கூட்டங்களில் விவோ நிறுவனம் பங்கேற்றவில்லை. எனவே ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து வெளியேற விவோ நிறுவனம் தயாராக இருப்பதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாகும் எனத் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.