ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிக்காமல் இருப்பதற்காக சிறுவர்களுக்கு மதுபானம் வழங்கியுள்ள கிராமமக்களின், சம்பவத்தால் அதிர்ச்சி?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
கொரோனா பாதிக்காமல் இருக்க சிறுவர்களுக்கு மதுபானம் வழங்கிய கிராம மக்கள் – வைரலாகும் வீடியோ
ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிக்காமல் இருப்பதற்காக சிறுவர்களுக்கு வரிசையாக மதுபானம் வழங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் திணறிவருகின்றன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்காக கோவேக்சின் என்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மதுபானங்கள் குடித்தால் கொரோனா பாதிப்பு வராது என்று பல்வேறு நாடுகளிலும் வதந்திகள் பரவின. அதனால், பல இடங்களில் மதுபானங்கள் குடித்து பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன. அதனால், கொரோனா குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன.