மனிதம் மரித்த மனது.
குப்பைக் கூட்டும்,கால் சற்று ஊனமான பெண் தொழிலாளி ஒருவர்,தனக்கு ஒதுக்கப்பட்ட சில தெருக்களில் வேலை செய்து களைத்துப் போய், தெருவில்
உள்ள ஒரு வீட்டில் குடிக்கத் தண்ணீர்
கேட்கிறார். வீட்டுக்காரப் பெண் குடிக்க நீர் இல்லை என்று மறுத்துக் கதவை
வேகமாக மூடி விட்டு சென்று விட்டார்.
முகத்தில் ஏமாற்றமும் அவமானமுமாக
அந்தப் பெண் கண்கலங்கி நிற்க
எதிர்வீட்டிலிருந்த ஒரு பெண்
அவரை அழைத்து செம்பில் கொஞ்சம்
நீரும் கொடுத்து அவர் கொட்டிய
உள்ளக்குமுறலையும் கேட்டுக் கொண்டு
ஆறுதல் கூற புன்முறுவலோடு தனது
பணியை மீண்டும் செய்ய அந்தப் பெண்
சென்று விட்டாள்.!
படிக்காதவர்கள்,பாமர மக்கள் பணம்
சம்பாதிக்க எத்தனையோ நல்ல
வழிகளும் கெட்ட வழிகளும் இந்த
வையகம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன .!
குப்பை சுமக்கும் ஒருவரை பிறர் தாழ்வாக நினைப்பதே பாவம்.அதிலும் ஒரு சக உயிருக்குக் காட்டும், மனிதாபிமான இரக்கம் கூட இந்த மனிதர்களிடம் இருந்து அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை யோசித்தால் அந்த மனது நொந்து விடும்.
யாரும் இதுபோல் ஒருநாளும் செய்து விடாதீர்கள். இந்தப் பாவத்தின் ஊதியத்தை எவராலும் தாங்க முடியாது.!
அனைவரையும் மனிதனாய் மதிப்போம்.